[204] ”ஈ” என இரத்தல் இழிவுடையது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பெற்றவர்: வல்வில் ஓரி
திணை : பாடாண்திணை [ பாடப்பெறும் ஆண்மகனின்
புகழ், வலிமை கொடை,கருணை,
ஆகியவற்றை உரைத்தல்]
புகழ், வலிமை கொடை,கருணை,
ஆகியவற்றை உரைத்தல்]
கருதியதை உரைத்தல்.பரிசினைப் பாராட்டுதல்]
’ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்’
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று;
’கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று ;அதன் எதிர்,
’கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்நீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங் கடல் (05)
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும், மாவும் சென்று உண, கலங்கி
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, (10)
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்
புலவோன் - வாழியர், ஓரி! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. (14)
பொதுவாகப் புலவர்கள் அரசர்கள், வள்ளல்கள் முன் சென்று அவர்களைப் பற்றி உயர்வாக, மிகைப்படப் புகழ்ந்து பாடி, அவ்வள்ளல்கள் எதைக்க் கொடுத்தாலும் பெற்றுத் தம் வறுமைப் பிணியினைப் போக்கிக் கொள்வார்கள் என்று அவர்களைப் பற்றி ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால், அப்படிக் கூறப்படுகின்ற கருத்து மிகவும் தவறானது என்றும், புலவர்கள் உயர்ந்த கொள்கையினை உடையவர் என்றும் உணர்த்து புநானூற்றுப் பாடல்
மேலே உள்ள பாடலாகும். அது கூறும் உண்மைப் பொருள் பற்றி ஈண்டு காண்போமாக.
கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வல்வில் ஓரியினைப் பார்த்து, தன்வறுமையினைத் தீர்த்துக் கொள்வதற்காக புலவர் கழைதின் யானையார் வந்திருந்தார்.வல்வில் ஓரியும் புலவரை வரவேற்று அவருக்கு உணவும், உடையும் அளித்து உபசரித்தான்.ஆனால் புலவரின் வறுமை நோயினைத் தீர்க்கும் மருந்தான பரிசுப் பொருள்களைத் தராது காலத்தை நீட்டினான். அப் பொழுது புலவர் கழைதின் யானையார் பிவருமாறு கூறத் தொடங்குகிறார்.
”ஒருவரிடம் சென்று எனக்கு ஒரு பொருளை ‘ஈ’ என்று யாசிப்பது இழிவானது ஆகும். அப்படித் தன்னிடம் யாசகம் கேட்ட ஒருவருக்கு ‘ஈயேன்’
(கொடுக்கமாட்டேன்) என்று கூறுவது ஈ என யாசிப்பதனை விட இழிவான செயலாகும். தகுதியான ஒருவருக்கு, அவருடைய வறுமையினைப் போக்கிக் கொள்ள அவர் கேட்காமலே அவருக்கு வேண்டியவற்றைக் கொடுப்பது உயர்ந்த பண்பாகும்.அவ்வாறு கொடுப்பனவற்றை மறுத்துக் கூறுவது பிறருக்கு கொடுப்பதைவிட உயர்ந்த பண்பாகும்.”
“ஒருவருக்கு வெம்மைகுதியால் தாகம் ஏற்பட்டாலும், அருகே மிகுந்த நீர் பரப்பினை உடைய கட்ல் இருந்தாலும் கடலின் நீரை அருந்த மாட்டார்கள். பசுக்களும், பல்வேறு வகையான மிருகங்களும் சென்று குடித்து கலக்கிய சேறானாலும், குடிநீர் குளத்திற்குச் செல்ல பல வழிகள் உளவாகும். வள்ளலே1 அரசர்களிடம் தம் வறுமையைப் போக்க வேண்டிய பொருள் புலவர் பெருமக்களுக்கு கிடைக்கப்பெறாவிட்டாலரசர்களைப் பழித்துக் கூறமாட்டார்கள். அவ்வாறு தங்களுக்குப் ப்ரிசில் கிடைக்காமல் போனதற்கு தாங்கள் பரிசில் வேண்டி புறப்பட்டப் போது ஏற்பட்ட சகுனமும், புறப்பட்ட பொழுதும் சரியில்லை என தங்களை நொந்து கொள்வார்களே தவிர உன்போன்ற அரசர்களை பழித்துக் கூற மாட்டார்கள்.ஆகையினால் மழையினைப் போல் பயன் கருதாது யாவருக்கும் வேறுபாடின்றி வழங்கும் வல்வில் ஓரியே உன்னை நான் வெறுக்க மாட்டேன்”
என்னே சங்க காலப் புலவர் பெருமக்களின் உயர்ந்த பண்பு!
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக