.jpg)
பாடல் - 38 / தலைவி கூற்று
பாடியவர் : கபிலர்
[ தலைவன் திருமணம் செய்ய வேண்டி பொருள் தெடுவதற்காகப் பிரிந்து நீண்ட காலமாக
வராது இருக்க, வ்ருத்தம் அடைந்த தலைவியைப் பார்த்து தோழி, “உன்னைத் திருமணம்
செய்யும் பொருட்டு அன்றோ தலைவர் பொருளீட்டச் சென்றுள்ளார்; அவ்வாறு இருக்க நீ
அவ்வாறு சென்றதை நன்மையாகக் கருதாமல் வருத்தம் கொள்வது என்ன காரணம்
பற்றி?” என்று கேட்டாள். “தலைவரது பிரிவினை ஆற்றும் வலிமை என்னிடம்
இல்லை” என்று தலைவி கூறினாள்.]
கான மஞ்சை யறையீன் முட்டை
வெயிலொடு முசுவின் குருளை யுருட்டும்
குன்ற நாடன் கேண்மை யென்றும்
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
(வரைவு நீட்டித்த வழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக