குருவருள்

குருவருள்
குருவே சரணம்

திங்கள், 1 ஜூன், 2015

”தருமை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளிய ”சொக்கநாதர் வெண்பா” பாடல் எண் - 12




எப்போது மும்மலம் விட்டேறுவேன் பூரணமாய்
எப்போதுஉன் இன்பசுகத்து எய்துவேன் - எப்போதும்
நித்தியா சுத்தா நிராமயா சொல்தவறாச்
சத்தியா சொக்கநா தா.

பொருள்: 


  • என்றும் அழிவற்றவனே! பரிசுத்தமானவனே! மலநோயற்றவனே! ஒரு காலத்தும் பொய்யாகாத வரத்தைத் தருபவனே! சொக்கநாதப் பெருமானே! எப்போதும், எங்கும், பரிபூரணமாய், துன்பத்தொடு கூடாத இன்பத்தை அடைவேன்? சொல்லி அருள்க! விரைவில் இவற்றைதந்தருள்க
  • சிவாயநம! சிவாயநம! சிவாயநம!
    திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக