தவமோ சிறிதறியேன் தாரணிமேல் செய்யும்
அவமோ அளவில்லை யானால் சிவமோ
பெறுமாறென் கூடற் பிரானேமுப் பாசம்
அறுமாறென் சொக்கநா தா.
பொருள்: மதுரைத் தலைவனே! சொக்கநாதப் பெருமானே! நான் தவச் செயலையோ சிறிதும் அறிந்திலேன். இவுலகைல் நான் செய்யும் அவச் செயல்களுக்கோ ஓர் அளவில்லை இவ்வாறு இருக்கும் பொழுது எனது மும்மலங்களும்(ஆணவம்,கன்மம்,மாயை) நீங்கும் வழி யாது? அவை நீங்க நான் சிவத்தைப் பெறும் வழிதான் யாது? நீதான் அதனைத் தெரிவித்து அருளல் வேண்டும்
சிவாயநம! சிவாயநம! சிவாயநம!
திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக