புறநானூறு
192 யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !
பாடியவர் : கணியன் பூங்குன்றனார்
திணை : பொதுவியல்
[ எல்லாத் திணைகளுக்கும் பொதுவானத் தன்மையை உரைத்தல்.]
துறை: பொருண்மொழிக் காஞ்சி
[ உயிர்க்கு உறுதி தரும் சிறப்புப் பொருளை உரைத்தல் ]
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிந்தன்றும் இலமே; முனிவின் 5
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தன் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர் 10
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 13

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக