௧௦௯ திருப்பூந்துருத்தி
திருமறை : 06 / 95 தனித்திருத்தாண்டகம்
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வம் நீயே
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப் பகையும் பையநையும்
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கு எழில் என்ஞாயிறு எளியோம்
அல்லோம்
அல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறுசூடி
அனலாடி ஆனஞ்சும் ஆட்டுகந்த
செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர்
செவ்வான வண்ணர் என் சிந்தையாரே.
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே.
நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
நலஞ்சுடரே நால்வேதத்து அப்பால் நின்ற
சொல்பதத்தார் சொல்பதமும் கடந்து நின்ற
சொலற்கரிய குழலாய் இது உந்தன்மை
நிற்பதொத்துநிலை இலா நெஞ்சம் தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவேன் அல்லேன்
கனகம் மாமணி நிறத்து எம் கடவுளானே
திருக்கோயில் இல்லாத திரு இல்லூரும்
திரு வெண்ணீற ணியாத திருஇல்லூரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா வூரும்
பாங்கினோடு பலதளிகள் இல்லாவூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதனமும் வெண்கொடியும் இல்லாத வூரும்
அருப்பொடு மலர்பறித்து இட்டு உண்ணாத
வூரும்
வூரும்
அவையெலாம் ஊரல்ல அடவி காடே.
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில்
உண்பதன் முன்மலர் பறித்திட்டு
உண்ணாராகில்
அருநோய்கள்கெட வெண்ணீற னியாராகில்
அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும்
செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.
நின் ஆவார் பிறரின்றி நீயே ஆனாய்
நினப்பார்கள் மனத்துக்கு ஓர்வித்தும்
ஆனாய்
மன்னானாய் மன்னவர்க்கும் ஓரமுதம்
ஆனாய்
மறை நான்குமானாய் ஆறங்கமானாய்
பொன்னானாய் மணியானாய் போகமானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னின ல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே.
அத்தா உன்னடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக்கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை ஆனாய்
எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏற்றுக்
கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய்
அன்றே.
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில்
உண்பதன் முன்மலர் பறித்திட்டு
உண்ணாராகில்
அருநோய்கள்கெட வெண்ணீற னியாராகில்
அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும்
செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.
நின் ஆவார் பிறரின்றி நீயே ஆனாய்
நினப்பார்கள் மனத்துக்கு ஓர்வித்தும்
ஆனாய்
மன்னானாய் மன்னவர்க்கும் ஓரமுதம்
ஆனாய்
மறை நான்குமானாய் ஆறங்கமானாய்
பொன்னானாய் மணியானாய் போகமானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னின ல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே.
அத்தா உன்னடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக்கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை ஆனாய்
எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏற்றுக்
கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய்
அன்றே.
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும்
பொல்லேன்
குற்றமே பெரிது உடையேன் கோலமாய
நலம் பொல்லேன் நான்பொல்லேன் ஞானி
அல்லேன்
நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லாது ஒழிந்தேன்
அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேசவல்லேன்
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லர் ஆகில்
அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழு
நோயராய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
பொல்லேன்
குற்றமே பெரிது உடையேன் கோலமாய
நலம் பொல்லேன் நான்பொல்லேன் ஞானி
அல்லேன்
நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லாது ஒழிந்தேன்
அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேசவல்லேன்
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லர் ஆகில்
அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழு
நோயராய்
ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக