குருவருள்

குருவருள்
குருவே சரணம்

புதன், 3 மார்ச், 2010

சங்க இலக்கியச் சுவை பகுதி - [03] நற்றிணை விருந்து (0 2 )



10. பாலை

தோழி கூற்று.                                                                  { உடன் போக்குந் தோழியைப் பாதுகாப்பாயாக

(பாடினோர் பெயர் தெரியவில்லை)


அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்,
பொன்னேர் மேனி மணியில் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி - பூக்கேழ் ஊர
இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க்

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண்கோட்டு யானைப் பேஎர் கிழவோன் 
பழையன் வேல்வாய்த்து அன்னநின் 
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.

பதவுரை :       
பூக்கேழ் ஊர - மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரை  உடையவனே;
இன் கடுங் கள்ளின் - இனிய கடுப்புடைய கள்ளுணவையும்;
இழையணி நெடுந்தேர் - அணிகலன் அணிந்த நெடிய தேர்களை உடைய;
கொற்றச் சோழர் - வலிமை வாய்ந்த சோழ மன்னர்; 
கொங்கர்ப் பணீஇயர் - கொங்கரை அடக்கும் பொருட்டு;
வெண்கோட்டு யானை - வெண்மையான தந்தங்களை உடைய
                                                            யானைகளை உடைய;
பேஎர் கிழவோன் - ‘பேஎர்’ என்னும் ஊரின் தலைவானாம்;
பழையன் - ‘பழையன்’ என்னும் சேனாபதியிடத்து;
வேல் வாய்த்து அன்ன - தப்பாத வேற் படையைப் பெற்று 
                                                         வைந்திருந்தாற் போன்ற;
நின் - உன்னுடைய;
பிழையா - பிழைபடாத;
நன்மொழி - நல்ல மொழியைக் கேட்டு;
தேறிய இவகட்கு - உண்மையெனத் தெரிந்த இவளுக்கு;
அண்ணாந்து - நிமிர்ந்து;
ஏந்திய - உயர்ந்த;
வன முலை - அழகிய தனங்கள்;
தளரினும் - தளர்ந்தாலும்;
பொன் ஏர் மேனி - பொன் போன்ற மேனியிலே;
மணியில் - கருமணி போல;
தாழ்ந்த - தாழ்ந்து தொங்கிய;
நன்நெடுங் கூந்தல் - நல்ல நெடிய கூந்தல்;
நரையொடு முடிப்பினும் - நரையுடனே முடிக்கப் பெற்றலும்;
நீத்தல் ஓம்புமதி -[அவ்வேளையில் இவள் நம் கூடலுக்கு 
                                             பயன் படாது முதுமை அடைந்தாள் என்று கருதி]  
                                            விட்டு பிரியாது பாதுகாப்பாயாக.    
               
                                                              

1 கருத்து:

  1. மிகவும் சிறப்பான பதிவு .
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    பதிலளிநீக்கு